மாற்றம்

Tuesday, February 16, 2010

செந்தணல் வீசும் கண்கள் கண்ணீர்உகுக்குதடி
அதில் வெறுமை தங்குதடி.
கத்தி எடுத்த கைகள் கோலேடுக்குதடி
கவி எழுத எழுதுகோல் பிடிக்குதடி.
உன் நினைவுகள் விம்மி வெடிக்குதடி
இதயம் எண்ணித் துடிக்குதடி.
வார்த்தைகள் நெஞ்சில் தேங்குதடி
வெளிவர முடியாமல் எண்ணி ஏங்குதடி .
என் காதல் புனிதமடி - நீயில்லை என்றால்
என் உயிரும் நீங்குமடி.

0 comments: