நிற்க

Saturday, March 12, 2011


காதலியே
கவிதையாக நிற்கும் போது
எழுத வார்த்தைகளற்று
திகைக்கிறேன்

சிறை

Wednesday, August 11, 2010



சிறையிடப் படாமல் இருந்தாலும்
பறக்க விரும்பாத பறவை போல
என் மனதிலேயே தங்கியிருக்கும்
உன் நினைவும்.. என் காதலும் 

பிரிவில்

Tuesday, July 20, 2010

நீ விட்டுச் சென்று
காய்ந்து போன
பூவின் வாசனையை
நுகரும் போது தான்
உன் பிரிவின் நிதர்சனம்
நெஞ்சில் தெரிகிறது

பிரிவில்

Wednesday, July 14, 2010


பிரிவில் உனைத் தேடி
நான் கிறுக்கிய வரிகள்
கவிதையாக உருமாறிய போது
அதில் எனக்கு மீண்டும்
நீ கிடைத்தாய்...

பிரிவில்...

Tuesday, July 06, 2010

நம் பிரிவில்
ஒவ்வொரு நொடியும்
உன் பெயரைச்
சொல்லித் தான்
நகர்கிறது.

அர்த்தங்கள்

Saturday, April 17, 2010


விழித்திருக்கும் நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைகின்றன
நீ வரும் நாட்களை
கணக்கிடும் போது ...

முடியாது

Thursday, February 18, 2010


என்னால் விழித்திருக்க முடியும்
நீயின்றி என்னால்
உறங்க தான் முடியாது.

என்னால் அழ முடியும்
நீயின்றி என்னால்
சிரிக்க தான் முடியாது.

என்னால் காண முடியும்
நீயின்றி என்னால்
ரசிக்கத் தான் முடியாது.

என்னால் நேசிக்க முடியும்
நீயின்றி என்னால்
சுவாசிக்க தான் முடியாது.

என்னால் சாக முடியும்
நீயின்றி என்னால்
வாழத் தான் முடியாது.